ஹாங்காங்: ஹாங்காங்கில் மிகவும் பிரத்தியேகமான இடத்தில் இருக்கும் தனது சொத்துகளை அமெரிக்கா விற்பதாக வெளியுறவுத்துறை பிரதிநிதி ஒருவர் வெளியிட்ட மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்தார்.
ஹாங்காங்கில் தொடர்ந்து நடக்கும் போராட்டங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் தொடர்பில் சீனா, அமெரிக்கா இடையே நிலவும் பதற்றம் காரணமாக இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தெற்கு ஹாங்காங்கில் இருக்கும் 10 பில்லியன் ஹாங்காங் டாலர் மதிப்பிலான சொத்தை விற்கும் அதே வேளையில் அமெரிக்க தூதரக கட்டடம் உட்பட ஹாங்காங்கில் உள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான மற்ற சொத்துகளை மேம்படுத்துவதில் முதலீடு செய்யப்படும் என்றார் அவர்.
இதற்கிடையே, அதிகரிக்கும் போராட்டங்கள் காரணமாக ஹாங்காங் குடியிருப்பாளர்கள் பலரும் வேறு நாடுகளுக்குக் குடிபெயர்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.