ஹனோய்: வியட்னாமில் கிருமித்தொற்றால் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
அவர் டானாங்கில் கிருமித்தொற்றுக்கு ஆளானதாகக் கூறப்படும் 70 வயது முதியவராவார்.
இதற்கிடையே நேற்று புதிதாக கிருமித்தொற்றுக்கு ஆளான 45 பேரும் டானாங்கைச் சேர்ந்தவர்கள். இது வியட்னாமில் இதுவரை பதிவான ஆக அதிக எண்ணிக்கையாகும்.
அதுபோல் ஹோ சி மின் நகரத்தில் இரண்டு கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. இதை
யடுத்து அங்கு இரவு நேர நடமாட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதுபானக்கூடங்கள், கண்காட்சிகள், விழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 30 பேருக்கு மேல் கூடுவதற்கும் அனுமதி கிடையாது.
வெளிநாட்டுப் பயணிகளுக்கு மார்ச் மாதம் முதல் வியட்னாம் தடை விதித்ததையடுத்து, உள்ளூர் மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்
பிடிப்பது போன்றவற்றில் மெத்தனமாக இருந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதவிர விமானப் பயண கட்டணங்கள், விடுதி கட்டணங்கள் மலிவு விலையில் கிடைத்ததால், பலர் உள்ளூர் சுற்றுலாவிற்கும் சென்றனர்.
இந்நிலையில், டானாங்கிலிருந்து வெளியேற்றப்பட்ட 80,000 சுற்றுலாப் பயணிகளில் எத்தனை பேருக்குத் தொற்று இருக்குமோ என்ற கவலையும் அங்கு நிலவுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் ஹனோய் அல்லது ஹோ சி மின் நகரத்தைச் சேர்ந்தவர்களாவர்.