சக ஊழியரைப் பழிவாங்கும் நோக்கில் பாலர்பள்ளி மாணவர்கள் 25 பேருக்கு வழங்கப்பட்ட கஞ்சியில் விஷம் வைத்ததற்காக சீன நீதிமன்றம் ஆசிரியை ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வாங் யுன் எனும் அந்த ஆசிரியை சக ஆசிரியர் ஒருவரின் மாணவர்களுக்கு வழங்க இருந்த கஞ்சியில் சோடியம் நைட்ரேட் ரசாயனப் பொருளைக் கலந்தார்.
அந்தச் சம்பவத்தில் 3 முதல் 6 வயதுக்குட்பட்ட 25 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
அவர்களில் ஒரு மாணவர் கடுமையாக பாதிக்கப்பட்டு, இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் உயிரிழந்தார்.
சோடியம் நைட்ரேட் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்திருந்தும், பின் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், வாங் அதனை குழந்தைகள் சாப்பிடும் உணவில் கலந்ததாக ஜியாவ்ஸோ சிட்டி நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 28) தெரிவித்தது.