மாணவர்களின் உணவில் விஷம்; ஆசிரியைக்கு மரண தண்டனை

மாணவர்களின் உணவில் விஷம்; ஆசிரியைக்கு மரண தண்டனை

1 mins read

சக ஊழி­ய­ரைப் பழி­வாங்­கும் நோக்­கில் பாலர்­பள்ளி மாண­வர்­கள் 25 பேருக்கு வழங்­கப்­பட்ட கஞ்­சி­யில் விஷம் வைத்­த­தற்­காக சீன நீதி­மன்­றம் ஆசி­ரியை ஒரு­வ­ருக்கு மரண தண்­டனை விதித்­துள்­ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்­தில் வாங் யுன் எனும் அந்த ஆசி­ரியை சக ஆசி­ரி­யர் ஒரு­வ­ரின் மாண­வர்­க­ளுக்கு வழங்க இருந்த கஞ்­சி­யில் சோடி­யம் நைட்­ரேட் ரசா­ய­னப் பொரு­ளைக் கலந்­தார்.

அந்­தச் சம்­ப­வத்­தில் 3 முதல் 6 வயதுக்குட்பட்ட 25 மாண­வர்­கள் பாதிக்­கப்­பட்­ட­னர்.

அவர்­களில் ஒரு மாண­வர் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்டு, இவ்­வாண்டு ஜன­வரி மாதத்­தில் உயி­ரி­ழந்­தார்.

சோடி­யம் நைட்­ரேட் கடும் விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும் என்­பதை அறிந்­தி­ருந்­தும், பின் விளை­வு­க­ளைப் பற்றி கவ­லைப்­ப­டா­மல், வாங் அதனை குழந்­தை­கள் சாப்­பி­டும் உண­வில் கலந்­த­தாக ஜியாவ்ஸோ சிட்டி நீதி­மன்­றம் கடந்த திங்­கட்­கி­ழமை (செப்­டம்­பர் 28) தெரி­வித்­தது.