சீனாவின் மேற்கத்திய மாநிலத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா

சீனாவின் மேற்கத்திய மாநிலத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா

1 mins read
3b58bad7-b930-4d9a-9cdf-b8e21051b31d
-

சீனாவின் ஸின்ஜியாங் மாநிலத்தின் கஷ்கார் பகுதியில் புதிதாக கொவிட்-19 குழுமம் ஒன்று உருவாகியுள்ளது. அங்குள்ள ஆடை தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றுடன் பாதிக்கப்பட்ட சுமார் 20 பேர் தொடர்பில் இருந்ததாக அந்நாட்டின் ஸின்ஹுவா அரசு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

நோய்த்தொற்றுக்குள்ளான 17 வயது பெண் தொழிலாளி வழியாக பிறருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தபோதும் அங்கிருந்து அந்தப் பெண்ணுக்கு இந்நோய் எப்படி தொற்றியது என்பது தெளிவாக இல்லை அம்மாநில மக்கள் மீது செய்யப்பட்ட வழக்கமான பரசோதனைகளில் ஒன்றின்போது அந்தப் பெண், கொவிட்-19 நோயாளி என்பது தெரிய வந்தது. அவர் ஏன் சோதிக்கப்பட்டார் என்பதற்கும் விளக்கம் இல்லை.