ஜியாங்சு: சீனாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது கல்லூரி முதல்வரை மாணவர்கள் பிணையாக பிடித்து வைத்திருந்தனர்.
ஜியாங்சு மாநிலத்தில் உள்ள நாஞ்சிங் பல்கலைக்கழகத்தின் ஜாங்பாய் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒன்றுகூடிய இளங்கலை பட்டதாரிகள், 55 வயதான கல்லூரி முதல்வரை 30 மணி நேரத்திற்கும் மேலாக வளாகத்தில்
தடுத்துவைத்ததாக டான்யாங் நகர போலிசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.
நாஞ்சிங் கல்லூரியை தொழிற்கல்வி கழகம் ஒன்றுடன் இணைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள், தாங்கள்
படித்துபெற்ற பட்டத்திற்கு மதிப்பில்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் மாணவர்கள் இவ்வாறு செய்ததாகவும் அவர்கள் கூறினர்.
கல்லூரியை இணைக்கும் திட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்து
வதாக அதிகாரிகள் அறிவித்த பிறகும் மாணவர்கள் முதல்வரை வெளியேறவிடவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, முதல்வரை விடுவிப்பதற்காக அங்கு சென்ற போலிசார் தடியடி நடத்தியதால் சில மாணவர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.