பெய்ஜிங்: சீனாவின் கிழக்குப் பகுதியில் இன்ஃபா புயல் நேற்று கரையைக் கடந்தது.
இதனால் ஷங்ஹாய் நகரிலும் அதைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளிலும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
அண்மையில் மத்திய சீனாவில் மிக மோசமான வெள்ளம் ஏற்பட்டது.
அதில் குறைந்தது 58 பேர் மாண்டனர்.
பாதிக்கப்பட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
வெள்ளம் அதிகமாக இருந்த இடங்களிலிருந்து ஒரு மில்லி
யனுக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டனர்.