நியூயார்க்: கொவிட்-19 டெல்டா வகை கிருமி தொற்றாமல் தடுப்பதில் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியைவிட மொடெர்னா நிறுவனத்தின் தடுப்பூசி சிறந்ததாக இருக்கலாம் என்று இரண்டு சுகாதார அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவிலும் கனடாவிலும் நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளில் இந்த விவரங்கள் தெரியவந்தன.
எனினும், இரண்டு தடுப்பூசிகளுக்கும், அவற்றைப் போட்ட ஆறிலிருந்து 12 மாதங்களுக்குப் பிறகு கூடுதல் தடுப்பூசி தேவைப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டது. அப்போதுதான் ஊசி போட்டுக்கொள்பவருக்கு முழுமையான பாதுகாப்பு இருக்கும் எனக் கருதப்படுகிறது.