கேன்பரா: கிறிஸ்மஸ் தினத்துக்குள் தனது அனைத்துலக
எல்லைகளைத் திறக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக கிருமிப் பரவல் மோசம் அடைவதைத் தடுக்க ஆஸ்திரேலியா அதன் எல்லைகளை மூடியது.
இந்நிலையில், கூடிய விரைவில் எல்லைகளைத் திறக்க ஆஸ்திரேலியா இலக்கு கொண்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் 80 விழுக்காட்டை எட்டியதும் அந்தந்த மாநிலங்களில் இருக்கும் ஆஸ்திரேலியர்கள் மீண்டும் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளலாம். குறிப்பிட்ட நாடு
களுக்குத்தான் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்காது என்று ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துறை அமைச்சர் டேன் டெஹன் தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் செல்ல பெரும்பாலான வெளிநாட்டவர்
களுக்கு விதிக்கப்பட்ட தடை தற்போது நடப்பில் உள்ளது.
எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டால் ஆஸ்திரேலியர்கள் அவர்கள் விருப்பப்படி எந்த நாட்டுக்கும் செல்லலாம் என்று அமைச்சர் டெஹன் தெரிவித்த
போதிலும், அந்தந்த நாடுகளின் விதிமுறைக்கு உட்பட்டு அவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியர்
களின் தனிமைப்படுத்தும் நாட்
களைக் குறைக்க சிறப்பு இருவழிப் பயண ஏற்பாடு தொடர்பாக சில நாடுகளுடன் ஆராய்ந்து வருவதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறியது.
இதற்கிடையே, கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் நடை
முறைப்படுத்தப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்த்து மெல்பர்னில் கடந்த சில நாட்
களாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க மெல்பர்னில் நேற்று கூடுதல் போலிஸ் அதிகாரிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டனர். வன்முறைமிக்க ஆர்ப்பாட்டங்கள் தடுக்கப்படும் என்று அந்நகர போலிஸ் படையின் தலைமை ஆணையர் ஷேன் பேட்டன் சூளுரைத்தார்.
மூர்க்கத்தனமாக நடந்துகொள்ளும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியபோதும் எத்தகைய உத்திகள் கையாளப்படும் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.
ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாக மெல்பர்ன் போலிசார் தெரிவித்தனர்.