உலக தொற்று மரணங்கள் 5 மில்லியன்

உலகளவில் கொவிட்-19 கொள்ளைநோய் தொடர்பாக உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்து மில்லியனைத் தாண்டிவிட்டதாக ‘ராய்ட்டர்ஸ்’ பகுப்பாய்வு தெரிவிக்கிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் டெல்டா வடிவ கொரோனாவின் கைகளில் அதிகம் சிக்குவதாக வும் அது குறிப்பிட்டுள்ளது.

முதல் இரண்டரை மில்லியன் மரணங்கள் பதிவாக ஓராண்டு காலத்திற்குமேல் ஆன நிலையில், அடுத்த எட்டு மாதங்களுக்குள் மேலும் இரண்டரை மில்லியன் பேர் இறந்துவிட்டனர்.
ஆக அதிகமாக, அமெரிக்காவில் 700,000 பேர்க்கு மேல் கொரோனா தொற்றால் மாண்டுவிட்டனர். பிரேசில், இந்தியா, மெக்சிகோ, ரஷ்யா, பெரு ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
கண்ட அடிப்படையில் பார்க்கும்போது, ஒட்டுமொத்த உயிரிழப்புகளில் 21% தென்னமெரிக்கக் கண்டத்தில் பதிவாகியிருக்கிறது.

சென்ற வாரத்தில், உலகில் சராசரியாக நாளொன்றுக்கு 8,000 கொரோனா மரணங்கள் நிகழ்ந்தன. அதாவது, ஒரு நிமிடத்திற்கு ஐந்து பேர் உயிரிழந்தனர். ரஷ்யாவில் இதற்குமுன் இல்லாத அளவாக, இன்று ஒரே நாளில் கொரோனாவால் 883 பேர் இறந்துவிட்டனர். அங்கு தகுதியுள்ளோரில் 33 விழுக்காட்டினர் மட்டுமே தங்களது முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர். இப்போதைக்கு ‘டெல்டா’ வகை கொரோனா கிருமியே உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!