மெல்பர்ன்: தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ‘ஓமிக்ரான்’ என்று பெயர் இடப்பட்டுள்ள புதிய உருமாறிய கிருமி பலரைப் பாதித்து வருவதால் அங்கிருந்து வரும் பயணி களுக்கு உலக நாடுகள் தடை விதித்து வருகின்றன.
அந்த வரிசையில் ஆஸ்திரேலியாவும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா, நமிபியா, ஸிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோத்தோ, எஸ்வாட்டினி, சீஷெல்ஸ், மொசாம்பிக் உள்ளிட்ட நாடுகளில் புதிய கிருமி தலைகாட்டி யிருக்கிறது.
இந்நிலையில் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் ஆஸ்திரேலிய குடிமக்கள் அல்லாத பயணிகள் நாட்டில் நுழைய தடை விதிக்கப்படுவதாகவும் இந்தக் கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ஆஸ்திரேலியா நேற்று அறிவித்தது.
ஆனால் ஆஸ்திரேலிய குடிமக்களும் அவர்களைச் சார்ந்து இருப்போரும் நாடு திரும்பியதும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகள் அனைத்துலக மாணவர்களுக்கும் வெளிநாட்டுத் திறனாளர்களுக்கும் பொருந்தும்.
கடந்த 14 நாள்களில் அத்தகைய நாடுகளிலிருந்து ஏற்கெனவே ஆஸ்திரேலியாவுக்கு வந்திருந்தால் அவர்கள் உடனே தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே புதிய உருமாறிய கிருமியால் தனது நாடு பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக தென்னப்பிரிக்க சுகாதார அமைச்சர் ஜோ பாஹ்லா வேதனை தெரிவித்துள்ளார். குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பயணத் தடைகளை விதித்துள்ளன.
“இது நியாயமற்றது. உலக சுகாதார நிறுவனத்தின் நியதிகளுக்கு எதிரானது,” என்று வெள்ளிக் கிழமை செய்தியாளர் கூட்டத்தில் அைமச்சர் ெதரிவித்தார்.
பிரிட்டன் மட்டுமல்லாமல் பல நாடுகள் தெற்கு ஆப்பிரிக்காவுக்கான விமானச் சேவைகளை நிறுத்தியுள்ளன.
இதற்கிடையே புதிய ஓமிக்ரான் கிருமியை தற்போதுள்ள தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த முடியுமா என ஆராயப்பட்டு வருகிறது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள கவலையளிக்கும் புதிய கிருமி பற்றி அதிக தரவுகள் தேவைப்படுவதாக பயோஎன்டெக் கூறியது.
அதன் பிறகே ஃபைசருடன் சேர்ந்து தயாரிக்கப்படும் தடுப்பூசி யில் மாற்றம் தேவையா என்பது பற்றி முடிவு செய்ய முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.
அவசியம் ஏற்பட்டால் நூறு நாட்களில் புதிய கிருமிக்கு எதிரான தடுப்பூசிகளைத் தயாரிக்க முடியும் என்று ஃபைசர், பயோஎன்டெக் ஆகிய இரண்டும் தெரிவித்துள்ளன.