வாஷிங்டன்: புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள 'ஓமிக்ரான்' கிருமி யால் உலகம் முழுவதும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கங்கள் மீண்டும் புதிய கிருமியால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.
அதிவேகத்தில் பரவக்கூடிய ஓமிக்ரான் கிருமி தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்டது.
அதன் பிறகு ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜெர்மனி, இஸ்ரேல், இத்தாலி, செக் குடியரசு, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் அது பரவி வருகிறது.
இஸ்ரேல் முன்ெனச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் தடை விதித்துள்ளது. இது விரைவில் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.
இஸ்ரேலில் இதுவரை ஏழு பேர் ஓமிக்ரான் கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப் படுகிறது. மலாவியிலிருந்து திரும்பிய மற்றொருவருக்கும் புதிய கிருமிப் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இரண்டு ஓமிக்ரான் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தென்னாப்பிரிக்காவிலிருந்து சிட்னிக்குத் திரும்பிய இருவர் புதிய கிருமியால் பாதிக்கப்பட்டனர் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில சுகாதார அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து ஏற்கெனவே நாடு திரும்பிய இதர 12 பயணிகளுடன் சேர்த்து அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இரு பயணிகளும் முழுமைாகத் தடுப்பூசி போட்டவர்கள். அவர் களிடம் கிருமித் தொற்றியதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 14 நாட்களில் ஒன்பது ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்ற பயணிகள் நாட்டுக்குள் நுழைய அனுமதியில்லை என்று ஆஸ்திரேலியா புதிய உத்தரவை பிறப்பித்தது.
தென்னாப்பிரிக்கா, லெசோத் தோ, போட்ஸ்வானா, ஸிம்பாப்வே உட்பட ஆப்பிரிக்க நாடுகளின் பயணிகள் அனுமதிக்கப்பட மாட் டார்கள்.
தென் கொரியாவும் எட்டு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. தென்னாப் பிரிக்கா, போட்ஸ்வானா, நமிபியா, ஸிம்பாப்வே, லெசோத்தோ, எஸ்வாட்டினி, மாலவி மற்றும் மொஸாம்பிக்கிலிருந்து வரும் பயணிகளுக்கு அனுமதியில்லை என்று தென்கொரிய நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு முகவை தெரிவித்தது.
தெற்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் குடிமக்களும் அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் பத்து நாட்கள் தங்க வேண்டும் என்று முகவை கூறியது.
ஐரோப்பிய நாடுகளும் உருமாறிய கிருமிக்கு எதிராக புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளன.