ஹாங்காங்கில் தீப்பிடித்துக் கொண்ட 40 மாடிக் கட்டடத்தில் அங்கு 300க்கும் அதிகமானவர்கள் சிக்கியிருக்கக் கூடும்.
ஹாங்காங்கில் வெளியிடப்படும் சவுத் மார்னிங் சைனா போஸ்ட் நாளிதழ் இதைத் தெரிவித்தது.
நகரின் மையப் பகுதியில் உள்ள 'காஸ்வே பே'யில் அமைந்துள்ள 'வர்ல்ட் டிரேட் சென்டர்' கட்டடத்தில் மதிய உணவு நேரப் பரபரப்பின்போது தீப் பிடித்துக்கொண்டது.
கடும் புகையால் பாதிக்கப்பட்டு ஏழு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் சவுத் மார்னிங் சைனா போஸ்ட் கூறியது.
குறைந்தது ஒருவருக்கு காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டது.
தீயை அணைக்கவும் கட்டடத்தில் சிக்கியிருப்பவர்களை காப்பாற்றவும் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹாங்காங் அரசாங்கம் கூறியது.