சிட்னி: டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச்சின் விசாவை ஆஸ்திரேலியாரத்து செய்ததைத் தொடர்ந்து, மற்ற வெளிநாட்டு டென்னிஸ் வீரர்களின் விசா குறித்தும் ஆஸ்திரேலியா விசாரித்து வருகிறது.
தடுப்பூசி போட்டுக்கொள்வதிலிருந்து விலக்களிக்கும் திட்டத்தின்கீழ் நாட்டிற்குள் நுழைந்த மேலும் இரண்டு வீரர்களின் சான்றிதழ்களை ஆஸ்திரேலிய எல்லைப் படை ஆராய்ந்து வருவதாக உள்துறை அமைச்சர் கரேன் ஆண்ட்ரூஸ் சொன்னார்.
ஆனால், ஜோக்கோவிச்சைப் போலவே, தடுப்பூசிக்கான மருத்துவ விலக்கு அளிக்கப்பட்ட மூவர் ஏற்கெனவே ஆஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த வாரம் மேலும் பலர் வரக்கூடும் என்றும் தகவல்கள் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.
ஜோக்கோவிச், தடுப்பூசி விலக்கு அளிக்கப்பட்டதற்கான சான்றுகளைச் சமர்ப்பிக்கவில்லை என்பதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ஆஸ்திரேலியா கூறியது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய பொதுவிருதுப் போட்டியில் கலந்துகொள்ள சென்ற ஜோக்கோவிச்சை 'குற்றவாளியை நடத்துவது' போல் நடத்தவேண்டாம் என்று ஆஸ்திரேலியாவிடம் செர்பியா கேட்டுக்கொண்டுள்ளது.
தடுப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஜோக்கோவிச்சை, நல்ல தங்குவிடுதிக்கு மாற்றுமாறும் அது கேட்டுக்கொண்டது.
செர்பியா தொடர்பான எந்தவொரு குறிப்பிட்ட நிலைப்பாட்டின் காரணமாகவும் ஜோக்கோவிச்சின் விசா ரத்து செய்யப்படவில்லை என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.
ஜோக்கோவிச்சின் விசா குறித்து மீண்டும் நாளை மறுநாள் விசாரிக்கப்படும்.