ஃபுளோரன்ஸ்: அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் திரண்டிருந்த தனது ஆதரவாளர்களிடையே முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார்.
டிரம்ப்பின் உரையைக் கேட்பதற்காக ஃபுளோரிடா, டெக்சாஸில் இருந்து சில ஆதரவாளர்கள் ஒரு சில நாள்கள் முன்னதாகவே பேரணி நடக்கும் இடத்திற்குச் சென்றுவிட்டனர்.
2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் வென்றதாக தனது உரையில் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.
"தீவிர ஜனநாயகவாதிகள் அமெரிக்காவை ஒரு கம்யூனிஸ்ட் நாடாக மாற்ற விரும்புகிறார்கள்.
"தேர்தலில் நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றோம். அதை அவர்கள் பறித்துக்கொள்ளவிட மாட்டோம்," என்றார் அவர்.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்கா இடைத் தேர்தலைச் சந்திக்கவுள்ள நிலையில் டிரம்ப்பின் இந்த பேரணி நடந்துள்ளது.
இத்தேர்தலில் போட்டியிடவுள்ள குடியரசு கட்சி வேட்பாளர்கள் சிலர் இந்த பேரணியில் உரையாற்றினர், அவர்கள் அதிபர் ஜோ பைடனை பலவீனமானவர், குழப்பமானவர் என்று சாடினர்.