வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்ற பாலி தீவு

இந்தோனீசியாவின் பாலி தீவுக்கு வெளிநாட்டுப் பயணிகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர்.

ஈராண்டுகளுக்குப் பிறகு அங்கு மீண்டும் சுற்றுப்பயணிகள் வருகையளித்தனர்.

தோக்கியோவிலிருந்து நேரடியாக பாலி தீவுக்கு பறந்த கருடா இந்தோனீசியா விமானம் வியாழக்கிழமை (பிப்ரவரி 2) அன்று மதியம் அங்குத் தரையிறங்கியது.

இதில் ஆறு வெளிநாட்டினரும், ஆறு இந்தோனீசியர்களும் பயணம் செய்ததாக பாலி சுற்றுப்பயணத் துறை அலுவலகம் தெரிவித்தது.

பாலிக்கு வரும் வெளிநாட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பதோடு, தங்களைச் சில நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.

சீனா, நியூசிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் பாலி திறந்துவிடப்பட்டது.

ஆனால் நேரடி விமானச் சேவைகள் இல்லாததால், பாலிக்கு இதுவரை வெளிநாட்டுப் பயணிகள் யாரும் செல்லவில்லை.

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவதால் பாலி தீவின் சுற்றுலாத்துறை புத்துயிர் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!