இந்தோனீசியாவின் பாலி தீவுக்கு வெளிநாட்டுப் பயணிகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர்.
ஈராண்டுகளுக்குப் பிறகு அங்கு மீண்டும் சுற்றுப்பயணிகள் வருகையளித்தனர்.
தோக்கியோவிலிருந்து நேரடியாக பாலி தீவுக்கு பறந்த கருடா இந்தோனீசியா விமானம் வியாழக்கிழமை (பிப்ரவரி 2) அன்று மதியம் அங்குத் தரையிறங்கியது.
இதில் ஆறு வெளிநாட்டினரும், ஆறு இந்தோனீசியர்களும் பயணம் செய்ததாக பாலி சுற்றுப்பயணத் துறை அலுவலகம் தெரிவித்தது.
பாலிக்கு வரும் வெளிநாட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பதோடு, தங்களைச் சில நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.
சீனா, நியூசிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் பாலி திறந்துவிடப்பட்டது.
ஆனால் நேரடி விமானச் சேவைகள் இல்லாததால், பாலிக்கு இதுவரை வெளிநாட்டுப் பயணிகள் யாரும் செல்லவில்லை.
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவதால் பாலி தீவின் சுற்றுலாத்துறை புத்துயிர் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.