கியவ்: பல வாரங்கள் நீடித்த கடுமையான சண்டைக்குப் பிறகு முக்கியப் போர்க்களமாகக் கருதப்படும் 'சிவியரோடோனெட்ஸ்க்' நகரிலிருந்து உக்ரேனியப் படைகளை மீட்டுக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
உக்ரேனிய வீரர்கள் போரில் உயிர்நீப்பதைக் குறைப்பதும் படைக்குழுக்களை வேறு இடங்களுக்கு மாற்றி அனுப்புவதும் இந்த நடவடிக்கையின் நோக்கம்.
வெடிகுண்டுத் தாக்குதலால் உருக்குலைந்து கிடக்கிறது 'சிவியரோடோனெட்ஸ்க்'. முன்னர் இங்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ரசாயன ஆலை ஒன்றில் சிக்கியிருந்தனர். இனி இங்கு மீட்பதற்கு அதிகம் ஏதுமில்லை என்கிறது உக்ரேன்.
இருப்பினும் உக்ரேனியப் படையினர் மீட்டுக்கொள்ளப்படுவதை ரஷ்யா தனக்குக் கிடைத்த குறிப்பிடத்தகுந்த வெற்றியாகக் கருதக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.