நோம்பென்: ஆங் சான் சூச்சியை தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று மியன்மார் ராணுவ அரசாங்கத்தை ஆசியானுக்கான சிறப்புத் தூதர் கேட்டுக்கொண்டார்.
கம்போடிய வெளியுறவு அமைச்சர் பிராக் சோக்ஹோன் இரண்டாவது முறையாக நாளை மியன்மாருக்குச் செல்லும் வேளையில் சூச்சிக்கு கருணை காட்டுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
பத்து உறுப்பு நாடுகளைக் கொண்ட ஆசியான் எனும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டு அமைப்பு வகுத்துள்ள மியன்மாருக்கான அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியாக அவரது பயணம் அமைவதாக கம்போடிய வெளியுறவு அைமச்சு தெரிவித்தது.
கடந்த ஆண்டு ஆங் சான் சூச்சியின் அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து சூச்சி மீது குைறந்தது இருபது குற்றச்சாட்டுகளை சுமத்தி அது வழக்கு விசாரணையை நடத்தி வருகிறது. தலைநகர் நேப்பிடாவில் உள்ள தனிமைச்சிறைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். தன் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் சூச்சி மறுத்துள்ளார். கடந்த வாரம் சிறை தண்டனையிலிருந்து 77 வயது சூச்சி விடுவிக்கப்பட்டாலும் இன்னமும் அடையாளம் தெரியாத இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.