புலியை முறத்தால் அடித்து விரட்டிய வீரத் தமிழாச்சி கதையை நாம் கேட்டிருப்போம், படித்திருப்போம்.
இங்கே துருக்கி நாட்டில் ஒரு பெண் கத்தி ஏந்திய திருடனை துணியால் அடித்து விரட்டியுள்ளார்.
துருக்கியில் உள்ள ரொட்டிக் கடை ஒன்றில் திருட முயற்சி செய்துள்ளான் ஒருவன். கையில் ஒரு கத்தி வேறு. எனினும் அந்த ஆடவரையோ கத்தியையோ கண்டு பயப்படவில்லை கடையின் ஊழியர்.
கடையைச் சுத்தம் செய்துகொண்டிருந்ததால் கையில் ஒரு துணியை மட்டுமே அந்தப் பெண் அப்போது வைத்திருந்தார்.
இருப்பினும் அந்தப் பெண் விடவில்லை. சரமாரியாக அவனைத் துணியால் அடித்து துவம்சம் செய்தார். முகமூடி அணிந்திருந்த அந்த திருடனின் முகமூடி நீக்கிய உடனே ஓட்டம் பிடித்துள்ளான். கடைக்கு வந்த ஒரு ஆடவரும் கத்தியைக் கண்டு மிரளாமல் அவனைப் பிடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவன் ஓட்டம் பிடித்துவிட்டான்.
கடையின் கண்காணிப்புக் கேமராவில் பதிவான இந்தக் காணொளியை நீங்களும் பார்த்து ஆச்சரியப்படுங்கள்.