சிட்னி: ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகை ஆக அதிகம் உள்ள மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் பள்ளிகளில் கைப்பேசிகளைத் தடை செய்ய கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் பயிலும் ஏறத்தாழ 12 வயது மாணவர்கள் பள்ளியில் இருக்கும்போது கைப்பேசிகளைப் பயன்படுத்த முடியாது எனச் சில பள்ளிகள் அறிவித்தன. கைப்பேசி பயன்பாட்டைச் சில பள்ளிகள்
கட்டுப்படுத்தின.
இந்த அணுகுமுறை பலன்
தந்திருப்பதாக அப்பள்ளிகள் தெரிவித்தன. மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதாகவும் தேர்வு முடிவுகள் மேம்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது, ஆசிரியர்
களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான தொடர்பு வலுவடைந்திருப்பதாக நியூ சவுத் வேல்ஸ் கல்வி அதிகாரிகள் கூறினர்.
இதனால் இந்த அணுகு
முறையை அனைத்து மாணவர்
களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பலர் குரல்
எழுப்பியுள்ளனர். சிட்னியில் உள்ள டேவிட்சன் உயர்நிலைப்பள்ளி 12 வயதிலிருந்து 16 வயது வரையிலான மாணவர்களுக்கு இவ்வாண்டு தொடக்கத்தில் கைப்பேசிக்கு தடை விதித்தது.
அதன்படி, மாணவர்கள் தங்கள் கைப்பேசிகளைப் பள்ளிக்குக் கொண்டு செல்லலாம். ஆனால் அவற்றை தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பாதுகாப்புப் பெட்டிகளில் பூட்டி வைத்திவிட வேண்டும்.
கைப்பேசித் தடை காரணமாக மாணவர்களிடையிலான தொடர்பு, பேச்சு அதிகரித்திருப்பதாக பள்ளியின் தலைமையாசிரியர் திரு டேவிட் ரூல் மகிழ்ச்சி தெரிவித்தார்.
"கவனச் சிதறலைக் குறைக்கும் அணுகுமுறைகள் பள்ளி ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் பலனைத் தருகின்றன. கைப்பேசி இல்லாததால் பிறருடன் பேசும் பழக்கம் அதிகரித்துள்ளது. மேலும் மாணவர்கள் பலர் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இதனால் மகிழ்ச்சி அடைகிறோம்," என்று திரு ரூல் கூறினார். பள்ளிகளில் கைப்பேசித் தடைக்குப் பெற் றோரிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.