கோலாலம்பூர்: முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், அவரின் மனைவி ரோஸ்மா மன்சூர் ஆகியோரின் ஆடம்பரப் பொருள்களை அவர்களிடம் திரும்பித் தருவது குறித்து வரும் நவம்பர் மாதம் 14ஆம் தேதியன்று உயர்நீதிமன்றம் முடிவெடுக்கும். நகைகள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், கைப்பைகள் ஆகியவை பறிமுதலான பொருள்களில் அடங்கும்.
1எம்டிபி விவகாரம் தொடர்பிலான விசாரணையின்போது அதிகாரிகள் அந்தப் பொருள்களை 'பெவிலியன் ரெசிடன்சஸ்' உயர்தர கூட்டுரிமை வீட்டிலிருந்து பறிமுதல் செய்தனர். 2018ஆம் ஆண்டு சோதனைகள் நடத்தப்பட்டபோது அந்தப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.