டெஹ்ரான்: சர்ச்சைக்குரிய 22 வயது குர்தியப் பெண்ணின் மரணத்தையடுத்து ஈரானில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. வட ஈரான் மாநிலம் ஒன்றில் மட்டும் 450 பேர் கைது செய்யப்பட்டதாக ஈரான் அரசாங்க ஊடகம் நேற்று தெரிவித்தது.
ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுக்க மேற்கொள்ளப்படும் வன்முறை கலந்த நடவடிக்கைகளை நிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய வெளிநாட்டுத் தூதரான ஜோசெப் போரெல் ஈரானிடம் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஈரானின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.
மற்ற நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இங்கிலாந்து தலைநகர் லண்டன், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் ஆகியவற்றில் ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினருடன் மோதினர்.