தெஹ்ரான்: ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உணவகம் ஒன்றில் தலையங்கி அணியாமல் உணவருந்திய குமாரி டோன்யா ராட் என்ற பெண்ணை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அப்பெண்ணின் சகோதரி தெரிவித்துள்ளார்.
குமாரி டோன்யா ராட்டும் அவரது தோழியும் தலையங்கி அணியாமல் உணவு சாப்பிடும் படம் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன. அண்மையில் தலையங்கி அணியாததற்காக தடுத்து வைக்கப்பட்ட மாஹ்சா அமினி எனும் பெண் மாண்டதை அடுத்து, ஈரானில் உள்ள பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குமாரி டோன்யா ராட்டின் பாதுகாப்பு குறித்து அவரது குடும்பம் கவலை தெரிவித்துள்ளது.