சூரிய குடும்பத்தின் ஆகப்பெரிய கோளான வியாழன் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு நெருக்கமாக காட்சியளித்தது.
செப்டம்பர் 27ஆம் தேதி அதிகாலை 3.15 மணிக்குப் பிறகு இந்த அரிய காட்சி நிகழ்ந்தது.
அப்போது பூமி நடுவில் இருக்க. சூரியனுக்கு நேர் எதிரே வியாழன் வந்தது.
இதனால் சூரியன், பூமி, வியாழன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டுக்கு வந்தன. வியாழன் பெரிய அளவில் பிரகாசமாக தென்பட்டது.