சோல்: வடகொரியத் தலைநகரம் பியோங்யாங்கில் முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தென்கொரிய ஊடகம் தெரிவித்துள்ளது.
பியோங்யாங்கில் சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருவதால் இந்நடவடிக்கை எடுக்கப்
பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் நோயின் பெயரை வடகொரியா வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. வடகொரிய அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் கொவிட்-19 பற்றி எவ்வித குறிப்பும் இல்லை.
வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மக்கள் தங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பியோங்யாங் மக்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் உடல்வெப்பநிலையைப் பலமுறை சோதித்து அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதால் பியோங்யாங் மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் குவித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடகொரியாவின் வேறு பகுதிகளில் இதேபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.