பேங்காக்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் 15 சுற்றுப்பயணிகளும் அவர்களின் வழிகாட்டியும் பேருந்து ஓட்டுநரின் உதவியோடு தீ விபத்திலிருந்து தப்பித்துக்கொண்டனர்.
போலந்தைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளும் அவர்களின் வழிகாட்டியும் பேருந்தில் இருந்தனர்.
புதன்கிழமையன்று இச்சம்பவம் நிகழ்ந்தது.
பேங்காக்கிலிருந்து அயுத்தாயாவுக்குப் புறப்பட்ட பேருந்தின் பெட்டிகள் வைக்கும் பகுதியிலிருந்து புகை வெளியே பரவியது.
உள்ளூர் நேரப்படி காலை எட்டு மணியளவில் குவான்சிட் எனும் அப்பேருந்தின் ஓட்டுநர் புகையைக் கண்டார்.
சாட்டுசாக் வட்டாரத்தில் சி ராட் விரைவுச்சாலையின் மேடான பகுதிக்குச் சென்றபோது பேருந்து தீப்பிடித்துக்கொண்டது.
ஓட்டுநர் உடனடியாகப் பேருந்தை சாலையின் இடதுத் தடத்தில் நிறுத்தி அதிலிருந்த அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினார்.
போலந்தைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளும் அவர்களின் வழிகாட்டியும் பேருந்தில் இருந்தனர்.
தீயணைப்பாளர்கள் சுமார் 20 நிமிடங்களில் தீயை அணைத்தனர்.