தோக்கியோ: ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஃபுக்குஷிமா பகுதியை ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி நிலநடுக்கம் உலுக்கியது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6ஆகப் பதிவானது.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி அபாயம் இல்லை என்று ஜப்பானிய வானிலை மையம் தெரிவித்தது.
உயிர்ச் சேதம், பொருட்சேதம் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.
நிலநடுக்கம் காரணமாக தலைநகர் தோக்கியோவிலும் அதிர்வுகள் ஏற்பட்டதாக ஜப்பானிய அதிகாரிகள் கூறினர்.
தைவானில் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதியன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக குறைந்தது ஒன்பது பேர் மாண்டனர். 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், பலரைக் காணவில்லை என்று தைவானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.