இங்கிலிஷ் கால்வாயைக் கடக்க முயன்ற ஐவர் மரணம்

பாரிஸ்: இங்கிலிஷ் கால்வாய் வழியாகப் படகில் ஃபிரான்சிலிருந்து பிரிட்டனுக்குச் செல்ல முயன்ற ஐந்து குடியேறிகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) மாண்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த ஐவரில் ஒரு குழந்தையும் ஒரு பெண்ணும் அடங்குவர்.

சிறிய படகில் ஏறக்குறைய 110 பேர் ஏறியிருந்ததாகக் கூறப்பட்டது.

எத்தனை பேர் மீட்கப்பட்டனர், எத்தனை பேரைக் காணவில்லை என்பது குறித்த தகவல் இல்லை.

அளவுக்கு அதிகமானோர் படகில் இங்கும் அங்கும் நகர்ந்ததில் இவ்வாறு நேர்ந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

பிரிட்டி‌ஷ் நாடாளுமன்ற மேலவையில் திங்கட்கிழமை இரவு அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தின்கீழ், அந்நாட்டு அரசாங்கம் அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்ப முடியும். இந்தச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து குடியேறிகள் சிலர் இவ்வாறு கால்வாயைக் கடக்க முயன்றனர்.

குடியேறிகள் ஐவர் மாண்டது குறித்துப் பேசிய பிரிட்டி‌ஷ் உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி, “இத்தகைய துயரச் சம்பவங்களுக்கு முடிவுகாண வேண்டும்,” என்றார்.

அண்மைய ஆண்டுகளில் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஆசியா ஆகியவற்றிலிருந்து பல்லாயிரக் கணக்கானோர் சிறிய படகுகளில் இங்கிலிஷ் கால்வாயைக் கடந்து பிரிட்டன் சென்றடைந்துள்ளனர்.

பிரிட்டிஷ் அரசாங்கம் குடியேறிகள் வருகையைத் தடுத்து நிறுத்துவதற்கு முன்னுரிமை தருகிறது. ஆனால், ருவாண்டா திட்டம் மனிதநேயமற்ற செயல் என்று மனித உரிமைக் குழுக்கள் சாடுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!