தமிழ்மொழி மீது பற்றும் ஆர்வமும் கொண்ட இரு மொழி ஆற்றல் கொண்டவரா நீங்கள்? புத்தாக்கச் சிந்தனையும் நடப்பு விவகாரம் பற்றிய புதிய பார்வையும் உள்ளவரா? சிங்கப்பூரில் நிறுவப்பட்டு, சிங்கப்பூர் இந்திய சமூகத்தின் குரலாகக் கடந்த 84 ஆண்டுகளாக வெற்றிகரமாக வெளிவரும் வர லாற்றுச் சிறப்புமிக்க 'தமிழ் முரசு' நாளிதழில் பணியாற்ற ஆர்வம் கொண்டவரா?
வளமான வாழ்க்கைத் தொழிலை தமிழ் முரசு நிறுவனத்துடன் தொடரும் நோக்கத்தில் அதன் தாய் நிறுவனமான சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) சிறப்புமிக்க கல்வி உபகாரச் சம்பளத்தை அறிமுகப்படுத்துகிறது. குறிப்பாக தமிழ் முரசில் பணியாற்றுவதில் ஆர்வம் கொண்ட இளம் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் உடனே இந்தக் கல்வி உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப் பிக்கலாம்.
செய்தியாளராக பணியாற்ற விரும்புவோரின் திறன்களை வளர்ப்பதற்கு எஸ்பிஎச் உபகாரச் சம்பளங்களை வழங்கி வருகிறது. மாறிவரும் உலகச் சூழலில் ஒவ்வொரு துறையும் மாற்றங்களை எதிர்நோக்கி வருகிறது. தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியும் அன்றாட செயல்பாடுகளில் மின்னிலக்க நடைமுறைகள் அதிகம் இடம்பிடித்து வரும் நிலையிலும் ஊடகத் துறையும் பல மேம் பாடுகளையும் மாற்றங்களையும் கண்டுவந்துள்ளது.
அந்த வரிசையில் ஊடகப் பணியில் செய்தி சேகரிப்பதும் எழுதுவதும் மட்டுமின்றி காணொ ளிகள் போன்ற புதிய வடிவில் செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் இன்றைய செய்தியாளர்கள் ஈடுபடுகிறார்கள். இளங்கலைப் பட்டக்கல்வியைத் தொடங்குவோருக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 15ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பல்கலைக்கழக பட்டக்கல்வியில் பாதிவரை முடித்தவர்களுக்கு இந்த உபகாரச் சம்பளத்திற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதியுடன் முடிவடைகிறது. சமூக, நாட்டு, உலக நடப்புகளைக் கண்டறிந்து கற்றல் ஆர்வ மிகுதியுடன் இருமொழி ஆற்றலும் கொண்டவர் கள் உடனே விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். வேலைப் பயிற்சிக்கு அழைக்கப்பட்டு அதன் மூலம் உங்களின் தேர்வை உறுதிசெய்து கொள் ளலாம். https://www.sph.com.sg/careers-scholarships/scholarship-opportunities/ எனும் இணையப்பக்க முகவரி மூலமாகவோ scholars@sph.com.sg எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியோ பதிவு செய்துகொள்ளலாம்.
தமிழ் முரசு எஸ்பிஎச் கல்வி உபகாரச் சம்பளம்
11 Feb 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Feb 2019 09:58

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

வெளிநாட்டு ஊழியரின் திருமணத்தில் முதலாளிக்குத் தடபுடல் வரவேற்பு

திரு லீ குவான் இயூவின் நீண்டகால மெய்க்காவலர் கருப்பையா கந்தசாமி.

வங்கி வைப்புத்தொகைக்கான காப்புறுதி வரம்பு அடுத்த ஆண்டிலிருந்து உயர்த்தப்படும்

கனடா நாட்டினருக்கு விசா இல்லை: இந்தியா தற்காலிகமாக நிறுத்தம்

இரண்டு வயசு மகளை கொன்ற ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறை தண்டனை

பேருந்து, ரயில் சேவைகளுக்கான பயணக் கட்டணம் பெரியவர்களுக்கு 11 காசு உயர்வு

நல்லாசிரியர் விருது 2023ல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர்கள்.

இவ்வாண்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் பட்டத்தை ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் கைப்பற்றினார்.

விடியலுக்கான விளக்கொளியாய் வழிகாட்டும் நல்லாசிரியர்களுக்கு விருது

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 3)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 2)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 1)

திரு லீ குவான் இயூ கண்காட்சி

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்திருவிழா.

பதவி ஓய்வு பெற்ற நாட்டின் முதல் பெண் அதிபர்

பெரும்பாலான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு சம்பளத்தை உயர்த்த திட்டம்: ஆய்வு

‘ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்’ ஹோட்டலில் இலங்கையைச் சேர்ந்த ஈஷான் தாரக கூட்டகே, 30, தன் மனைவியைக் கொலை செய்து விட்டதாகக் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

சிங்கப்பூர் எஃப்1 பந்தய போட்டிக்காக 'மெரினா பே ஸ்ட்ரீட் சர்க்யூட்' தயார் நிலையில் இருக்கிறது.

உடல் கட்டோடு 59 வயதில் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் அருண் ரொசியா எட்டு ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

ஜி20 உச்சநிலை மாநாடு: பிரதமர் லீ புதுடெல்லி பயணம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!