ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பாலித் தீவில் இம்மாதம் 23ஆம் தேதி நான்காவது உலகப் பெருங்கடல் பற்றிய உச்ச மாநாடு நடைபெறுகிறது. அன்றைய தினமே பிளாஸ்டிக் கழிவுகளுக்கு எதிராக போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்று அந்நாட்டின் சுற்றுப்புற அமைச்சர் தெரிவித்தார். உலக முழுவதும் கடலில் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேர்க்கும் நாடுகளில் இந்தோனீசியா 2வது இடத்தில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன்படி சுமார் 1.3 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் அந் நாட்டிலிருந்து வெளியேறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்: epaper.tamilmurasu.com.sg