சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் (எஸ்பிஎச்) புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக 55 வயது திரு இங் யட் சுங் செப்டம்பர் முதல் தேதியில் பதவி- யேற்கிறார். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ஜூலை 1ஆம் தேதி முதல் இவர் செயல் படுவார். இவர் தற்பொழுது எஸ்பிஎச் குழுமத்தின் சுயேட்சை இயக்குநராகப் பணியாற்றுகிறார். நிறுவனத்தின் நிர்வாக சபை யின் இடர் தவிர்ப்புக் குழுவுக்கும் தலைமை தாங்குகிறார்.
அத்துடன் நிர்வாகக் குழு, சம்பளக் குழு ஆகியவற்றின் உறுப்பினராகவும் உள்ளார். இவருக்கு அடுத்த நிலையில், தற்போதைய துணை தலைமை நிர்வாக அதிகாரியான ஆண்டனி டான், 44 அதே பதவியில் தொடர்வார். எஸ்பிஎச் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆலன் சானும் துணைத் தலைமை நிர்வாக அதிகாரியான பேட்ரிக் டேனியலும் 2017 செப்டம் பரில் ஓய்வு பெறுகின்றனர். திரு ஆலன் சான், 64, எஸ்பிஎச்சில் தலைமை நிர்வாக அதிகாரியாகக் கடந்த 15 ஆண்டுகளாகப் பொறுப்பு வகித்து வந்தார்.