லண்டன்: எட்டு நாடுகள் பங்குபெறும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கி லாந்தில் இன்று தொடங்குகிறது. லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் நடக்கும் முதல் ஆட்டத்தில் இங்கி லாந்தும் பங்ளாதேஷும் மோது கின்றன. இந்தத் தொடரில் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் வரும் 4ஆம் தேதி மோதவிருக்கிறது. அந்த ஆட்டத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
பங்ளாதேஷ் அணிக்கெதிராக நேற்று முன்தினம் நடந்த 2வது பயிற்சிப் போட்டியில் 94 ஓட்டங் களை விளாசிய தினேஷ் கார்த்திக் கின் ஆட்டத்தைக் கண்டு கோஹ்லி அசந்துபோனதாகத் தெரிகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 240 ஓட்ட வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றது. முதலில் பந்தடித்த இந்திய அணியில் ஷிகர் தவான் (60), தினேஷ் (94), ஹார்திக் பாண்டியா (80*) ஆகி யோர் அபாரமாக விளையாட, அந்த அணி 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 324 ஓட்டங் களைக் குவித்தது.
பங்ளாதேஷுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 77 பந்துகளில் எட்டு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 94 ஓட்டங்களை விளாசிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். படம்: ஏஎஃப்பி