வீட்டுக்குள் ‘மூர்க்கப் பூனை’; போலிசை அழைத்த ஆடவர்

பொங்கோலில் உள்ள வீடு ஒன்றுக்குள் பின்னிரவு வேளையில் கறுப்புப் பூனை ஒன்று நுழைந்தது. அதை வெளியேற்ற முடியாமல் தவித்த அந்த வீட்டின் உரிமையாளர், போலிசுக்கு உதவி நாடி அழைப்பு விடுத்திருந்தார். பின்னிரவு 1 மணியளவில் திரு ஹர்ரிஸ் அபு பக்கரின் வீட்டுக்குள் புகுந்த பூனையை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வெளியேற்ற முயன்றும் அது வெளியேறவில்லை. மாறாக அப்பூனை பயங்கரமாக கத்திக்- கொண்டு மிகவும் மூர்க்கமாக நடந்துகொண்டதுடன் தற்காப்புக்- காக தனது கால்களால் கீறிக் கொண்டே இருந்தது என்று திரு அபு பக்கர் தமது ஃபேஸ்புக் இணையப்பக்கத்தில் பதி விட்டு இருந்தார்.

அந்தப் பூனையை வெளியேற்ற முதலில் திரு அபு பக்கர் நகர மன்றத்துடன் தொடர்புகொண்டார். நகர மன்றம் அவரை விலங்குவதை தடுப்பு அமைப்பிடம் கைகாட்ட ஆனால் அந்த அமைப்போ அவரைப் போலி சிடம் கை காட்டிவிட்டது. அதனால் அவர் போலிசின் உதவியை நாடினார். சம்பவ இடத்திற்கு ஓர் ஆம்பு லன்ஸ் அனுப்பிவைக்கப்பட்டது. பின்னிரவு 2.12 மணியளவில் தகவல் கிடைத்து திரு அபு பக்கரின் வீட்டுக்குச் சென்ற போலிசார் அந்தப் பூனையைப் பிடித்து வீட்டுக்கு வெளியே கொண்டு சென்றனர். எனினும் அதன் பிறகு பூனை தப்பித்துச் சென்று விட்டது என்று தெரியவந்தது. இந்தச் சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!