மனிதவளத் துறையில் நிபுணத்துவம்: புதிய கல்வி உதவி நிதி

மனித வளத் துறையில் புதிய கல்வி உதவி நிதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தொழில்துறை கல்வி உபகாரச் சம்பளத்தின் கீழ் வழங்கப்படும் இந்தக் கல்வி உதவி நிதியை மனித வளத் துறையில் உள்ளவர்கள் பட்டக்கல்விக்குப் பின்னர் தங்களது நிபுணத்துவத்தை மேம்படுத்தப் பயன்படுத்தலாம் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது. மனிதவளம் குறைந்த பொருளியலை நோக்கி சிங்கப்பூர் செல்லும் நிலையில், நிறுவனங்கள் தங்களது திறனாளர் களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, மனிதவள ஊழியர்கள் வர்த்தகத்தை மாற்றியமைக்க உதவுவதுடன் ஊழியர்கள் புதிய பணிகளை மேற்கொள்வதற்கான திறன்களைப் பெறவும் உதவ வேண்டும் என்று ஊழியர்துறை நிபுணர்கள் கூறினர்.

ஒரு கல்வியாளர் $10,000 வரை உதவி நிதியைப் பெறலாம். தேவையான திறன்களைப் பெறவும் பட்டக் கல்விக்குப் பிந்திய நிபுணத்துவ மேம்பாட்டுக்கும் இந்த நிதியைப் பயன்படுத்த லாம். 2012ல் தொடங்கப்பட்ட சிங்கப்பூர் தொழில்துறை கல்வி உபகாரச் சம்பளம், இந்த உபகாரச் சம்பளத்தைப் பெறுவோருக்கு ஆதரவு வழங்கும் நிறுவனங்களில் பணியைத் தொடங்க வாய்ப்பளிக்கிறது. நேற்று மொத்தம் 117 பேர் இந்த உபகாரச் சம்பளத்தைப் பெற்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!