பெரம்பலூர்: அரசியலுக்கு வருவதற்கு முன்பே மக்களுக்குப் பல்வேறு உதவி களைச் செய்தவர் எம்ஜிஆர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். பெரம்பலூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் தடுப்பணைகள் கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ள தாகத் தெரிவித்தார். காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் கள் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தமிழகத்திற்கு கிடைத்த வரம் என்று குறிப்பிட்ட அவர், அதிமுக அரசை யாராலும் வீழ்த்த இயலாது என்றும் அவ்வாறு வீழ்த்த நினைப்பவர்கள்தான் வீழ்ந்துபோவார்கள் என்றும் கூறினார். "தமிழகத்தில் நடைபெற்று வரும் நல்லாட்சியை யாராலும் அசைக்க முடியாது. இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக நிலைத்து நிற் கும்," என்றார் முதல்வர். கோட்டையைப் பிடிக்க நினைப் பவர்கள் முதலில் மக்கள் மனதில் நிலைக்க வேண்டும் என்றும் அவர் மறைமுகமாக இடித்துரைத்தார். 1510 ஏரிகளில் குடி மராமத்துப் பணிகள் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
நல்லாட்சியை அசைக்க இயலாது: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்
7 Aug 2017 07:58 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Aug 2017 06:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!