நல்லாட்சியை அசைக்க இயலாது: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

பெரம்பலூர்: அரசியலுக்கு வருவதற்கு முன்பே மக்களுக்குப் பல்வேறு உதவி களைச் செய்தவர் எம்ஜிஆர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். பெரம்பலூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் தடுப்பணைகள் கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ள தாகத் தெரிவித்தார். காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் கள் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தமிழகத்திற்கு கிடைத்த வரம் என்று குறிப்பிட்ட அவர், அதிமுக அரசை யாராலும் வீழ்த்த இயலாது என்றும் அவ்வாறு வீழ்த்த நினைப்பவர்கள்தான் வீழ்ந்துபோவார்கள் என்றும் கூறினார். "தமிழகத்தில் நடைபெற்று வரும் நல்லாட்சியை யாராலும் அசைக்க முடியாது. இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக நிலைத்து நிற் கும்," என்றார் முதல்வர். கோட்டையைப் பிடிக்க நினைப் பவர்கள் முதலில் மக்கள் மனதில் நிலைக்க வேண்டும் என்றும் அவர் மறைமுகமாக இடித்துரைத்தார். 1510 ஏரிகளில் குடி மராமத்துப் பணிகள் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!