மரின் பரேடில் இருக்கும் 'கோட் டி அசுர்' அடுக்குமாடி புளோக் கில் ஒரு வீட்டில் வெந்நீர் சாதனம் சனிக்கிழமை வெடித்த தால் அந்த வீட்டின் சன்னல் கண்ணாடிக் கதவுகளும் தடுப்புக் கண்ணாடிகளும் நொறுங்கின. அந்தக் கூட்டுரிமை புளோக்கி லிருந்து சனிக்கிழமை மாலை சுமார் 5.10 மணிக்கு உதவிக்கு கோரிக்கை வந்ததாகவும் உடனே தான் தீயணைப்பு வாகனத்தை அங்கு அனுப்பியதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. ஐந்தாவது மாடியில் உள்ள வீட்டின் வெந்நீர் சாதனம் வெடித்ததால் கண்ணாடி கள் சேதம் அடைந்தன. அங்கு தீ மூளவில்லை. யாருக்கும் காயமில்லை.
எண் 70 மரின் பரேட் ரோடு முகவரியில் உள்ள 'கோட் டி அசுர்' கூட்டுரிமை புளோக்கில் இருக்கும் ஒரு வீட்டில் வெந்நீர் சாதனம் வெடித்து கண்ணாடிகள் நொறுங்கிவிட்டன. படம்: ஷின் மின்