பெய்ஜிங்: சீனா சென்றுள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அமெரிக்கா-சீனா உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறியுள்ளார். இதைவிட வேறு எதுவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க முடியாது என்றும் திரு டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவும் சீனாவும் சேர்ந்து பணியாற்றினால் இரு நாட்டு பிரச்சினை மட்டுமல்ல; உலகளாவிய பிரச்சினைகளுக் குமே தீர்வு காண முடியும் என்று திரு டிரம்ப் கூறினார். அத்துடன் மிகப் பெரிய ஆபத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கும் இரு நாடுகளும் சேர்ந்து தீர்வு காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வடகொரிய விவகாரம் குறித்து தாமும் திரு ஸி ஜின்பிங்கும் நேற்று காலை நடத்திய பேச்சு வார்த்தை சிறப்பான முறையில் அமைந்திருந்ததாகவும் திரு டிரம்ப் கூறினார். வடகொரியப் பிரச் சினைக்கு தீர்வு ஒன்று உண்டு என்று தாமும் திரு ஸி ஜின்பிங்கும் நம்பிக்கை கொண்டிருப்பாதகவும் திரு டிரம்ப் கூறினார். அணுவாயுதமற்ற கொரிய தீபகற்பத்தை குறிக்கோளாகக் கொண்டு சீனா அதன் பங்கை தொடர வேண்டும் என்று கூறிய திரு டிரம்ப், பேச்சுவார்த்தை மூலம் வடகொரியப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று கூறி னார். வடகொரியப் பிரச்சினைக்கு சீனா மிகவும் சுலபமாகவும் விரைவாகவும் தீர்வு காண முடியும் என்றும் திரு டிரம்ப் கூறினார். வடகொரியாவின் மிரட்டலை திரு ஸி கையாளும் விதம் குறித்து திரு டிரம்ப் பாராட்டிய அதே நேரத்தில் வடகொரியா அதன் அணுவாயுதத் திட்டத்தைக் கைவிட திரு ஸி கடினமாகப் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பெய்ஜிங் நகரில் உள்ள மக்கள் மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் கலந்துகொண்டனர். படம்: ஏஎஃப்பி