சென்னையில் வீடுகளில் புகுந்து கொள் ளையடிக்கும் ஆடவர் ஒருவர் அந்த வீடுகளில் இருக்கும் பெண்களை பாலி யல் பலாத்காரம் செய்வதை வாடிக்கை யாகக் கொண்டிருந்தார். போலிசாரின் பிடியில் சிக்கியிருக்கும் மதன் அறி வழகன், 27, என்னும் அந்த ஆடவர் சென்னை முழுவதும் கிட்டத்தட்ட 50 பெண்களை இவ்வாறு பாலியல் பலாத் காரம் செய்திருப்பதாக தமது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார். சென்னை வில்லிவாக்கம், அம்பத் தூர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங் கல், கிண்டி, மேற்கு மாம்பலம் ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகளில் இருந்து பொருட்களையும் பெண்களின் கற் பையும் களவாடிச் சென்றதை அந்த ஆடவர் போலிசாரிடம் விளக்கியுள்ளார்.
சென்னை நகர போலிசார் நேற்று முன்தினம் இரவு சைதாப்பேட்டையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந் தபோது மதன் அறிவழகன் சிக்கினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அவர் பெங்களூரில் மென்பொருள் நிறு வனம் ஒன்றில் வேலை செய்துவந்தார். அண்மையில் வேலையை உதறிவிட்டு திருட்டுத் தொழிலில் இறங்கினார். அவரிடம் கைப்பற்றப்பட்ட கைபேசி யில் பெண்களை அவர் பாலியல் பலாத் காரம் செய்யும் ஏராளமான காணொளி கள் இருந்தன. சில பெண்களை மீண் டும் சந்தித்து காணொளியைக் காட்டி மீண்டும் அந்தப் பெண்களைச் சீரழித்து உள்ளார். விசாரணை தொடருகிறது.
கைது செய்யப்பட்டு உள்ள மதன் அறி வழகன், 27. இவர் பிடிபட்ட தகவல் அறிந்ததும் தம்மை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக ஒரு பெண் இவருக்கு எதி ராகப் புகார் கொடுத் துள்ளார். படம்: தமிழக ஊடகம்