வரதட்சணை: கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண்

ஜெய்ப்பூர்: திருமண நாளில் ஒரு கோடி ரூபாய் வரதட்சணை கேட் ட தால் பெண் (பல் மருத்துவர்) ஒருவர் தனது திருமணத்தை கடைசி நிமிடத்தில் நிறுத்தினார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள மருத்துவக் கல்லூ ரி யில் பேராசிரியராகப் பணி யாற்றி வரும் அனில் சக்சேனா என்பவ ரின் மகள் ர‌ஷி. பல் மருத்துவரான ர‌ஷிக்கும் உ.பி.யின் மொராபாத் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரிய ராகப் பணியாற்றி வரும் சாக்ஷம் மாதோக் என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திரு மணம் நடைபெறவிருந்தது. கடந்த சனிக்கிழமை திரு மணம் நிச்சயம் செய்யப்பட்ட போது மணமகனுக்குக் காரும் தங்க நாணயங்களும் பரிசாக வழங்கப்பட்டன. கார் தவிர வரதட்சணை மற் றும் பிற ஏற்பாடுகளுக்காக ரூ.35 லட்சம் வரை செலவிடப் பட்டுள்ளது என மணமகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் திருமணத் துக்கு முன்பு மணமகன் குடும்பத் தினர் திடீரென பரிசுப் பொருட்கள், பணம், நகை எனக் கூடுதலாக ரூ.1 கோடி வரதட் சணை கேட்டதால் அனில் சக்சேனாவும் அவரது மனைவி யும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் தங்கள் மகள் ர‌ஷியிடம் பேசினர். ர‌ஷி தொலைபேசியில் மணமகனி டம் பேசினார். ஆனால் அவர் வரதட்சணையில் பிடிவாதமாக இருந்ததால் அவரை திருமணம் செய்துகொள்ள ர‌ஷி மறுத்து விட் டார். என்றாலும் திருமண விருந்து பரிமாறப்பட்ட பிறகே இந்த விஷயத்தை உறவினர்களிடம் அனில் சக்சேனா குடும்பத்தினர் தெரிவித்தனர். திருமணத்துக்கு மறுத்த ர‌ஷியின் முடிவை விருந் தினர்கள் பாராட்டினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!