பணிப்பெண்களைத் துன்புறுத்தும் குற்றங்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகளுக்கான முறையை உச்ச நீதிமன்றம் நேற்று வெளியிட்டது. இந்த வகைக் குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் மறுஆய்வு செய்யப் பட்டு மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் கூறியதை அடுத்து இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இரண்டாண்டுக ளாக இந்தோனீசிய பணிப்பெண் ணை துன்புறுத்திய குற்றத்திற்காக முன்பு தண்டனை வழங்கப்பட்ட டே வீ கியட், 39, அவரது மனைவி சியா யுன் லிங், 41 இருவருக்கும் விதிக்கப்பட்ட தண்டனை மறுபரிசீ லனை செய்யப்பட்டு டேயின் சிறைத் தண்டனை 28 மாதத்திலி ருந்து 43 மாதமாக அதிகரிக்கப் பட்டுள்ளது. தலைமை நீதிபதி உட்பட மூவர் கொண்ட நீதிபதி அமர்வு அந்த கடுமையாக்கப்பட்ட தண்டனையை நேற்று அறிவித்து உள்ளது.