திருப்பூர்: திருப்பூர் அருகே சாலை யோரமாக இருந்த கிணற்றுக்குள் கார் பாய்ந்ததில் ஐவர் அதிர்ஷ் டவசமாக உயிர் தப்பினர். உடுமலையைச் சேர்ந்த மோகன் ராஜ், 48, என்பவர் தனது மனைவி மீனாட்சியுடன் 45, திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற் காக புதன்கிழமை அன்று காரில் பயணம் செய்தார். மோகன்ராஜின் மனைவி மீனாட்சி, முன்னாள் அமைச்சர் உடுமலை சண்முக வேலுவின் மகள் ஆவார். காரில் மோகன்ராஜுடன் மூன்று உற வினர்களும் பயணம் செய்தனர். உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அனை வரும் அதே காரில் உடுமலைக்குத் திரும்பினர். அப்போது மோகன்ராஜ் காரை ஓட்டினார். இந்த நிலையில் பல்லடத்திலிருந்து உடுமலைச் செல்லும் வழியில் கேத்தனூரை அடுத்த மந்திரிபாளையம் பகுதி யில் கட்டுப்பாட்டை இழந்த கார், திடீரென்று சாலையின் இடது புறத்தில் இருந்த 30 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்தது.
கிணற்றில் தண்ணீர் இல்லை. கிணற்றில் விழுந்த காரிலிருந்து மோகன்ராஜ், முதலில் கண் ணாடியை உடைத்து வெளியே வந்தார். பின்னர் உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் குரல் கேட்டு ஓடி வந்து கயிறு வீசினர். முதலில் மோகன்ராஜ் மேலே வந்தார். இதற்கிடையே அங்கு வந்த தீ அணைப்புப் படை வீரர்கள் கிணற் றுக்குள் ஏணியை இறக்கி மற்ற நால்வரையும் மீட்டனர்.
கிணற்றுக்குள் பாய்ந்த காரிலிருந்து வெளியேறி ஒவ்வொருவராக மேலே வருகின்றனர். ஐவரும் காயமின்றி உயிர் தப்பினர். படம்: இந்திய ஊடகம்