உலகின் முன்னணி போத்தல் தண்ணீர் விற்பனை நிறுவனங் களின் தண்ணீர் போத்தல்களில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப் பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வும் தண்ணீரை போத்தலுக்குள் அடைக்கும் நடைமுறைகளின் போது தண்ணீர் இப்படி மாசுபட் டிருக்கலாம் எனவும் 9 நாடுகளின் தண்ணீர் போத்தல் மாதிரிகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. 'ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆஃப் நியூயார்க்'கைச் சேர்ந்த பிளாஸ்டிக் நுண்துகள் ஆய்வாளரான ஷெர்ரி மேசன் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் அமெரிக்காவைச் சேர்ந்த லாபநோக்கற்ற ஊடக அமைப்பால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன.
பிரேசில், சீனா, இந்தியா, இந்தோனீசியா, கென்யா, லெப னான், மெக்சிகோ, தாய்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து பெறப்பட்ட 250 மாதிரி தண்ணீர் போத்தல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அக்வா, அக்வாஃபினா, எவி யன், டாசானி, நெஸ்லே பியூர் லைஃப், சேன் பெல்லெக்ரினோ ஆகிய நிறுவனங்களின் தண்ணீர் போத்தல்கள் அவை. 93% போத் தல்களில் பிளாஸ்டிக் நுண்துகள் கள் இருந்தன. இந்தத் துகள் களால் ஏற்படும் உடல்நலக் கோளா றுகள் பற்றி தெளிவாகத் தெரிய வில்லை என நிபுணர்கள் தெரிவித் தனர். பெரும்பாலும் குழாயிலிருந்து வரும் தண்ணீர் நல்லது என திரு மேசன் கூறியுள்ளார்.