சிங்கப்பூரின் பொருளியல் கடந்த ஆண்டு வளர்ச்சி கண்டதை அடுத்து சிங்கப்பூரர் களுக்கான மேம்பட்ட வேலை வாய்ப்புகளோடு வேலைச்சந்தை யும் மேம்பாடு கண்டது. சிங்கப்பூரர்களின் வரு மானம் உயந்த அதேவேளையில் பணிநீக்கங்கள் குறைந்தன. நேற்று மனிதவள அமைச்சு வெளியிட்ட கடந்த ஆண்டுக் கான புள்ளிவிவரங்கள் இவ் வாண்டு ஜனவரியில் வெளி யான முதற்கட்ட தகவல்களை உறுதிசெய்பவையாக இருந்தன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதவாக்கில் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் ஊழியரணி யில் கூடுதல் இடம்பிடித்தனர். 2016ஆம் ஆண்டு 66.4%ஆக இருந்த அந்த அளவு சென்ற ஆண்டு 67.2% ஆக உயர்ந்தது.
கடற்துறை கப்பல்தளங்கள், கட்டுமானத் துறை ஆகியவற்றில் 32,200 வெளிநாட்டு ஊழியர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட் டதை அடுத்து வேலை அனுமதிச் சீட்டில் இங்கு பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்தது அதற் குக் காரணம். நிபுணத்துவச் சேவை, தகவல் தொழில்நுட்பப் பிரிவுகள் போன் றவற்றில் 'எம்ப்ளாய்மென்ட் பாஸ்' பிரிவிலும் 4,400 பேர் வேலையிலிருந்து விடுவிக்கப் பட்டனர். கடந்த ஆண்டு 21,300 உள்ளூர்வாசிகள் பணியில் அமர்ந்ததை அடுத்து, வீட்டுப் பணிப்பெண்கள் தவிர, கடந்த டிசம்பர் மாதம் இங்கு பணியில் இருப்போரின் எண்ணிக்கை 3,422,700 ஆனது. இந்த ஆண்டு பொருளியல் 1.5 முதல் 3.5% வரை வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுவ தால் இவ்வாண்டும் சிங்கப்பூரில் வேலைவாய்ப்புகள் தொடர்ந்து உயரும் என அமைச்சு குறிப்பிட் டது.