ஊருக்காக உயிரை விடும் உன்னத காதலர்கள்

திரைப்படங்களுக்கு வித்தியாசமான தலைப்புகளை வைப்பதில் கோடம்பாக்கத்தில் பெரும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், 'உளிரி' என்று தன் படத்துக்குப் பெயர் வைத்துள்ளார் இயக்குநர் ஜெயகாந்தன். இவர் ஏற்கெனவே 'விருதாசலம் பட்டு' என்ற படத்தை இயக்கியவர். வணிக ரீதியிலான அம்சங்களுடன் சமுதாயத்துக்கான கருத்துக்க ளையும் சொன்ன படம் என்றும் திருநங்கையர்களைப் பெருமைப் படுத்திய படம் என்றும் பலரும் இதைப் பாராட்டினராம். தற்போது பேய்க் கதைகளும் நகைச்சுவைப் படைப்புகளுமாக கோடம்பாக்கம் நிரம்பியுள்ள நிலை யில், மண்வாசனையுடன் கதை சொல்ல வந்திருக்கிறார் இவர்.

உளிரி என்பது ஒரு மீன் வகையாம். வஞ்சரம், வவ்வால் போன்ற மீன் வகைகளைக் கேள்விப்பட்டவர்களுக்கு உளிரி என்ற மீன் வகை இருக்கிறதா என்ற சந்தேகம் எழும். "இது காவிரி ஆற்றுப் படுகை யில் காணப்படும் அரிய வகை மீன். உருவத்தில் அயிரை மீன் அளவில் சிறியதாக இருக்கும். என்ன சோகம் என்றால் இந்த மீன் இனம் அழிந்து பத்துப் பதி னைந்து ஆண்டுகள் கடந்து விட்டன. "இந்த மீன் ஏழை மக்களின் பசியைப் போக்கிய இறைவனின் கொடை என்றே சொல்லலாம். டெல்டா மாவட்டங்களில் வறட்சி சமயத்தில் எலியை உணவாகச் சமைத்து விவசாயிகள் உயிர் வாழ்ந்தார்கள் என்று கேள்விப்பட் டுள்ளோம். அது போல் இந்த உளிரி மீனை பஞ்ச காலங்களில் சாப்பிட்டு உயிர் வாழ்ந்த மக்களும் இருக்கிறார்கள்," என்கிறார் ஜெயகாந்தன்.

'உளிரி' படத்தின் ஒரு காட்சியில் சுரேஷ், ஷைனி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!