திரைப்படங்களுக்கு வித்தியாசமான தலைப்புகளை வைப்பதில் கோடம்பாக்கத்தில் பெரும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், 'உளிரி' என்று தன் படத்துக்குப் பெயர் வைத்துள்ளார் இயக்குநர் ஜெயகாந்தன். இவர் ஏற்கெனவே 'விருதாசலம் பட்டு' என்ற படத்தை இயக்கியவர். வணிக ரீதியிலான அம்சங்களுடன் சமுதாயத்துக்கான கருத்துக்க ளையும் சொன்ன படம் என்றும் திருநங்கையர்களைப் பெருமைப் படுத்திய படம் என்றும் பலரும் இதைப் பாராட்டினராம். தற்போது பேய்க் கதைகளும் நகைச்சுவைப் படைப்புகளுமாக கோடம்பாக்கம் நிரம்பியுள்ள நிலை யில், மண்வாசனையுடன் கதை சொல்ல வந்திருக்கிறார் இவர்.
உளிரி என்பது ஒரு மீன் வகையாம். வஞ்சரம், வவ்வால் போன்ற மீன் வகைகளைக் கேள்விப்பட்டவர்களுக்கு உளிரி என்ற மீன் வகை இருக்கிறதா என்ற சந்தேகம் எழும். "இது காவிரி ஆற்றுப் படுகை யில் காணப்படும் அரிய வகை மீன். உருவத்தில் அயிரை மீன் அளவில் சிறியதாக இருக்கும். என்ன சோகம் என்றால் இந்த மீன் இனம் அழிந்து பத்துப் பதி னைந்து ஆண்டுகள் கடந்து விட்டன. "இந்த மீன் ஏழை மக்களின் பசியைப் போக்கிய இறைவனின் கொடை என்றே சொல்லலாம். டெல்டா மாவட்டங்களில் வறட்சி சமயத்தில் எலியை உணவாகச் சமைத்து விவசாயிகள் உயிர் வாழ்ந்தார்கள் என்று கேள்விப்பட் டுள்ளோம். அது போல் இந்த உளிரி மீனை பஞ்ச காலங்களில் சாப்பிட்டு உயிர் வாழ்ந்த மக்களும் இருக்கிறார்கள்," என்கிறார் ஜெயகாந்தன்.
'உளிரி' படத்தின் ஒரு காட்சியில் சுரேஷ், ஷைனி.