துப்புரவாளர்களுக்கான தேவையைக் குறைக்கும் வண்ணம் சிங்கப்பூரில் உள்ள வர்த்தகக் கட்டடங்களில் துப்புரவுப் பணியைச் செய்யும் ரோபோக்கள் கூடிய விரைவில் அறிமுகம் காணக்கூடும். முழுக்க முழுக்க தன்னிச்சையாக செயல்படும் 'ஸ்க்ரப் 50' எனப்படும் இந்த ரோபோக்கள் 'ஜூரோங் இன்னோவேஷன் டிஸ்ட்ரிக்ட்'டில் உள்ள 'ஜேடிசி கிளின்டெக் ஓன்' கட்டடத்தில் நேற்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. இந்த ரோபோவை 'ஜேடிசி', 'விஐஎஸ் ஹோல்டிங்ஸ்', 'காஸ்ஸியன் ரோபோட்டிக்ஸ்' ஆகிய நிறுவனங்கள் கூட்டாகத் தயாரித்தன. 1.1 மீட்டர் உயரமுடைய இந்த ரோபோவானது, மக்கள்தொகை மூப்படைந்துவரும் காரணமாக துப்புரவுத் தொழில்துறையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவும்.
'ஸ்க்ரப் 50' எனப்படும் இந்தத் துப்புரவு ரோபோவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் அதன் தயாரிப்பாளர்கள். படம்: சாவ்பாவ்