சிங்கப்பூரர்களில் மேலும் அரை மில்லியன் பேருக்கு அரசாங்கத் திடமிருந்து அவர்களின் மருத் துவச் செலவுகள் தொடர்பில் உதவி கிடைக்கவிருக்கிறது. முன்னோடித் தலைமுறையின ருக்குக் கொடுக்கப்பட்ட $8 பில்லியன் மதிப்புள்ள தொகுப்புத் திட்டம் போலல்லாமல், மெர் டேக்கா தலைமுறையினர் என்று அழைக்கப்படும் இந்தப் பிரிவின ருக்கு சற்று குறைவாகவே கிடைக்கும்.
அதற்காக குறிப்பிடத்தக்க அளவில் தொகை ஒதுக்கப்படும். இவர்கள் 1950களில் பிறந்தவர்க ளாக இருப்பார்கள் என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று தனது தேசிய தினப் பேரணி உரையில் தெரிவித்தார்.
1965ல் சிங்கப்பூரின் சுதந்திரத் துக்குப் பாடுபட்ட தலைமுறையின ரைவிட இவர்கள் வயது குறைந்த வர்களாக இருந்தாலும், "அவர்க ளில் பெரும்பாலோர் சுதந்திரத்துக் குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களைக் கண்கூடாகப் பார்த்தவர்கள், ஒளி மயமான எதிர்காலத்தை எதிர் நோக்கி காத்திருந்தவர்கள். அவர் களுக்கு உதவ நாம் கடமைப் பட்டுள்ளோம்," என்று திரு லீ விவ ரித்தார்.
அவர்களுக்கு சுகாதாரப் பரா மரிப்பு, வீடமைப்பு ஆகிய இரு அம்சங்களில் அரசாங்கம் உதவி செய்யும். மெர்டேக்கா தொகுப்புத் திட்டம் முன்னோடித் தொகுப்புத் திட்டம் போலவே உதவிகளை அளிக்கும். அதாவது, வெளி நோயாளிக் கட்டணக் கழிவுகள், மெடிசேவ் பணம் நிரப்புதல், மெடி ஷீல்டு லைஃப் சந்தாக் கழிவுகள், நீண்டகாலப் பராமரிப்புக்கு வழங் கீடுகள் போன்றவை அவற்றுள் அடங்கும்.