அமெரிக்காவில் அணுக்கமாகக் கவனிக்கப்பட்டு வந்த இடைக்கால தேர்தலில் வென்றதன் மூலம் ஜனநாயக கட்சி, பிரதி நிதிகள் சபையைத் தனது கட்டுப்- பாட்டுக்குள் கொண்டு வந்து உள்ளது. இதனால் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையைக் கைப்பற்றி உள்ள ஜனநாயக கட்சிக்கு இந்த வெற்றி, திரு டிரம்ப்பின் முயற்சி- களை முறியடிக்கும் வாய்ப்பாக அமையக்கூடும்.
இதனால் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் மசோ- தாக்கள் ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் வரும். இந்தப் புதிய கட்டுப்பாட்டால், அதிபர் டிரம்ப் சட்டபூர்வமாக முன்னி- றுத்தும் சில மசோதாக்கள் தடைப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், செனட் சபையில் தனது பெரும்பான்மையைக் குடி- யரசுக் கட்சி தக்கவைத்துக் கொண் டது. 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர் தலில் திரு டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது உலக நாடுகளை பெரிதும் ஆச்சரியப்படுத்தியது.
அதைத் தொடர்ந்து நடை- பெற்ற முதல் தேசிய அளவிலான இந்த இடைக்கால தேர்தலில் செனட் சபையில் குறைந்தது மூன்று இடங்களைக் குடியரசுக் கட்சி கைப்பற்றியது. இதன் மூலம் செனட் சபையில் தனது பலத்தை அதிகரிக்க குடியரசுக் கட்சி முயலும் எனக் கூறப்படுகிறது. அமெரிக்க காங்கிரஸ் என்பது செனட், பிரதிநிதிகள் சபை என இரு சபைகளைக் கொண்டது.
நேற்று முன்தினம் நடைபெற்ற இடைக்கால தேர்தல் வாக்கெடுப்பு அதிபர் டிரம்ப்பின் ஆட்சிக் காலத்- தின் மீதான வாக்கெடுப்பாக கரு தப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளில் அமெரிக்காவில் நடந்த இடைக் கால தேர்தல்களில் இந்த முறைதான் ஆக அதிக எண்ணிக்- கையில் வாக்குப்பதிவு நடந்திருப்ப தாக அரசியல் கவனிப்பாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதில், முதன்முறையாக வாக்- களிக்க தகுதி பெற்றுள்ள இளம் வாக்காளர்களும் பெண் வாக்காளர்- களும் வாக்களித்துன்னர். இந்த இடைக்கால தேர்தல்களில், பிரதி- நிதிகள் சபைக்கான 435 உறுப் பி னர்களையும் 100 உறுப்பினர்கள் கொண்ட செனட் சபையின் 33 உறுப்பினர்களையும் அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுத்தனர்.
அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் நடைபெற உள்ள பேரணி ஒன்றில் உரை நிகழ்த்தவுள்ள அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்காக காத்திருந்த குடியரசுக் கட்சி ஆதரவாளர் கூட்டம். படம்: இபிஏ