இம்மாதம் 25ஆம் தேதியலிருந்து பொங்கோலுக்குச் செல்லும் இணைப்புச் சாலையை வாகனங்கள் பயன்படுத்தலாம். இந்த இணைப்புச் சாலை பொங்கோல் சென்ட்ரலை காலாங் - பாயலேபார் விரைவுச்சாலை, தெம்பனிஸ் விரைவுச்சாலை ஆகியவற்றுடன் இணைக்கும். இந்த இணைப்புச் சாலை அடுத்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில்தான் திறக்கப்பட இருந்தது. ஆனால் வெர்ச்சுவல் மாடலிங், ப்ரீகாஸ்ட் கன்ஸ்ட்ராக்.ஷன் போன்ற தொழில்நுட்பக்களின் உதவியால் இணைப்புச் சாலை எதர்பார்க்கப்பட்டதைவிட விரைவாக தயாராகிவிட்டது.
காலாங்-பாயலேபார் விரைவுச்சாலையுடன் பொங்கோல் சென்ட்ரலை இணைக்கும் சாலையுடன் தெம்பனிஸ் விரைவுச்சாலைக்கு மேல் செல்லும் மேம்பாலச் சாலையும் இம்மாதம் 25ஆம் தேதி திறக்கப்படும். பொங்கோல் சென்ட்ரலுடன் தெம்பனிஸ் விரைவுச்சாலையை இணைக்கும் மற்றொரு சாலை அடுத்த ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்குள் தயாராகிவிடும்.