இவ்வாண்டின் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு முடிவுகள் அடுத்த வியாழக்கிழமை (நவம்பர் 22ஆம் தேதி) வெளியிடப் படும் என்று கல்வியமைச்சு தெரிவித்திருக்கிறது. காலை 11 மணி முதல் மாணவர்கள் தங்களின் முடிவுகளைத் தத்தம் பள்ளிகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். தகுதிபெறும் மாணவர்கள், தங்களின் முடிவுகளுடன் விருப்பமான உயர்நிலைப் பள்ளிகளைத் தெரிவு செய் வதற்கான பத்திரங்களையும் பெறுவர்.
இந்த 'உயர்நிலை ஒன்று தேர்வு பத்திரங்கள்' தனிப்பட்ட அடையாள எண் ணைக் கொண்டிருக்கும். இணையம் வழியான விண்ணப்பங்களுக்கு இந்த எண் பயன்படுத்தப்படலாம். இம்மாதம் 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப் படலாம். விண்ணப்ப முடிவுகள் டிசம்பர் 19ஆம் தேதியில் குறுந்தகவல், இணையம் அல்லது மாணவரின் தொடக்கப்பள்ளி வழியாக வெளியிடப்படும். இது குறித்த மேல் விவரங்களைக் கல்வியமைச்சின் இணையப்பக்கத்தில் காணலாம்.