ஷாங்காய்: சீனாவில் பாதிக்கும் மேற்பட்ட மாகாணங்களில் ஆப் பிரிக்க பன்றிக் காய்ச்சல் அதி வேகத்தில் பரவி வருவதாக அர சாங்கம் தெரிவித்தது. முன்பு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக அது கூறியது. ஆகஸ்ட் மாதத்தி லிருந்து பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் உலகின் ஆகப்பெரிய பன்றி இறைச்சி உற்பத்தி நாடான சீனாவுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
"தடுப்பு, கட்டுப்பாடு நடவடிக் கைகளை மீறி ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மோசமடைந்துள்ளது," என்று வேளாண், போக்குவரத்து, பொதுப்பாதுகாப்பு ஆகிய மூன்று அமைச்சுகளும் கூட்டு அறிக்கை யில் தெரிவித்தன. "குறைந்தது 17 மாகாணங்களில் பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. இது, தென்சீன மாகாணங்களில் உள்ள பெரிய பன்றி வளர்ப்பு பண்ணை களுக்கும் பரவி வருகிறது," என்று அது கூறியது. அரசாங்கக் கட்டுப்பாட்டில் செயல்படும் ஊடகம், "ஐந்து மாகாணங்களில் மட்டும் பன்றிக்காய்ச்சல் கண்டு பிடிக்கப்பட்டது," என்று செப்டம்பர் மாதம் கூறியது. ஆனால் பன்றிக் காய்ச்சல் அதிவேகமாக பரவுவ தாக தற்போது அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.