அதிபர் டோனி டான் கெங் யாம், சனிக்கிழமை இரவு சமூக உண்டியல் கிறிஸ்மஸ் அலங்கார ஒளியூட்டை தொடங்கி வைத்தார். ஒளியூட்டுக்குப் பொறுப்பாதரவு வழங்கும் ஹிட்டாச்சி ஆசியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இசிரோ லினோ, சிங்கப்பூருக்கான ஜப்பானிய தூதர் கெஞ்சி ஷினோடா ஆகியோரும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
ஆர்ச்சர்ட் ரோடு கிறிஸ்மஸ் அலங்கார ஒளியூட்டுக்குச் சமூக உண்டியல் அமைப்பு இத்துடன் 33 ஆண்டு காலமாக ஏற்பாடு செய்து வந்துள்ளது. அந்த ஒளியூட்டு ஜனவரி 2 வரை தொடரும். பல்வேறு நிகழ்ச்சிகளின் வழியாக சமூக உண்டியலுக்கு நன்கொடை திரட்டப்படும். சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையில் அரசதந்திர உறவுகள் ஏற்பட்டு 50 ஆண்டுகள் ஆவதைக் கொண்டாடு வதாகவும் அந்த ஒளியூட்டு திகழ்கிறது.
ஒளி வெள்ளத்தில் மிதக்கும் ஆர்ச்சர்ட் ரோட்டில் வலம் வரும் தேவதை. சமூக உண்டியல் கிறிஸ்மஸ் அலங்கார ஒளியூட்டை அதிபர் டோனி டான் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்